30.8.09

பகலிலே நிலவு!



பகலிலே நிலவு தெரியாது...
யாரோ சொல்லி கேட்டிருந்தேன்!
உன்னை இன்று காலை சந்தித்ததாலே
அந்த கூற்று பொய்யானது!

காதல் துயரம்!



வண்ண வண்ண கனவுகள்
இன்று
கருப்பு வெள்ளை ஆனது!

சின்ன சின்ன நினைவுகள்
இன்று
நெருப்பில் எரிந்த சாம்பல் ஆனது!

என் கனவு பெண்ணே
உன் நினைவை கொண்டே வாழ்வேன்!
என் கனவு பெண்னே
உன் கனவை கொண்டே வாழ்வேன்!

பிறந்தவுடன் நடக்க சொல்லி கொடுத்து யாரோ?
ஞாபகமில்லை எனக்கு!
வளர்ந்தவுடன் காதல் சொல்லித் தந்தது நீ தானே!
உன்னை மறக்கச் சொல்லித் தர மட்டும் மறுக்கிறாயே?
ஏன்? ஏன்? ஏன்?

2.9.08

உலகம் எங்கும் அமைதிப் பூங்கா வளர்ப்போம்!



உலகம் எங்கும் அமைதிப் பூங்கா வளர்ப்போம்!
கலகம் இல்லா அமைதிக் காடுகள் வளர்ப்போம்!

நிலவின் வெளிச்சம் கூட
நிலத்தின் இருளை அகற்றும்!
ஆதவனின் வெளிச்சம் தானே
யுகங்கள் நூறை படைக்கும்!

நாம் நினைத்தால் மட்டும் போதுமே-
நம் நினைவுகள் உலகங்கள் படைக்கும்!
நாம் கனவுகள் கண்டால் போதுமே-
நம் கனவுகள் நினைவுகள் ஆகும்!

மனிதனிடம் மனிதனை காக்க,
ஆயுதங்கள் செய்தோம்!
உலகம் தனை காக்க - இனி புது
ஆயுதங்கள் செய்வோம்!

மண்ணின் குழந்தை
மனிதன் மட்டுமே- என்ற
செயற்கை எண்ணம் மறப்போம்!

உயிரில்லா கல்லும்-
உயிருள்ள சிறு புல்லும்-
மண்ணின் குழந்தைகள் தானே!-என்ற
இயற்கை எண்ணம் வளர்ப்போம்!

இயற்கைச் சிதைவை தடுக்க,
பல அடிகள் எடுத்து வைப்போம்!
மனித நேயச் சிதைவை
அறவே நாமும் அறுப்போம்!

ஆக்கம் தானே வளர்ச்சி - அதை
ஊக்கம் கொண்டு செய்வோம்!
அழிப்பதில் என்ன வளர்ச்சி - அதைச்
செய்வதில் என்ன வளர்ச்சி?

புலியும் - புலியும் சண்டை கொள்வதில்லை!
கிளியும் - கிளியும் சண்டை கொள்வதில்லை!
மனிதன் மட்டும் செய்யும் அவலமிது....
இது தான் வளர்ச்சியா?
சொல் நீ மனிதா!

வானம் தரை வந்தாலும்,
மானம் உன்னை தடுத்தாலும்,
உலகம் தனை காத்திட
என்றும் நீ மறக்காதே!

வாரம் பல கடந்தாலும்,
ஈரம் கண்ணை நனைத்தாலும்,
கலகம் தனை அழித்திட,
என்றும் நீ தயங்காதே!

உந்தன் எண்ணம் நம்பி தானே,
மண்ணின் மானம் இனி இருக்கு!
மானம் காக்க உழைத்திரு மனிதா!-மனிதா!

1.9.08

உன்னை நினைத்தால்...



ஆண்:

உன்னை நினைத்தால்...
உன்
அன்பை நினைத்தால்...
என் உள்ளம் சிலிர்க்கும்!
பின் உடலும் சிலிர்க்கும்!

வண்ணக் கவிதை- ஒரு
சின்னக் கவிதை
நான் உன்னை எண்ணியே
வரைந்தேன்... நானும் வரைந்தேன்...

எழுதிய கவிதையை மெதுவாய்...
சொல்லிப் பார்த்தேன்...

உந்தன் பெயரைச் சொல்லும்...
சுகம் தான்- வரவில்லையே!

பெண்:

விண்ணை அளப்பேன்!
இந்த,
மண்ணை அளப்பேன்!
உந்தன்,
கண்ணை மட்டும் காண
எந்தன் உள்ளம் நடுங்கும்!
நடுக்கத்திலும், மனம் அதை தானே விரும்பும்!

ஆண்:

ஒரு பாவை பார்த்தும் திரும்பாத என்னை
திரும்ப வைத்தவள் நீ தான்!
ஒரு பார்வை பார்த்ததும் மனதில்,
விரும்ப வைத்தவள் நீ தான்!

பெண்:

ஒரு பார்வை காண தவிப்பேன்-
என்று நான்...
நினைக்கவில்லை-நம்பவில்லை!
உன் பார்வை கண்டு விழுந்தேன்-
விழுந்தும் ரசித்தேன்!

நான் விழுந்தது காதலுக்குள்!

17.8.08

நட்பு தரும் சுதந்திரம்!



மழை வருமுன்னே-
மண்வாசனை வரும்!

வாசம் தரும் சுகம் தனை மழை கொடுக்குமா?

காதல் வருமுன்னே,
நட்பு தானே வரும்!

நட்பு தரும் சுதந்திரம் காதல் கொடுக்குமா?

சுற்றினேன்!



சூரியனை சுற்றும் பூமி போல்!
பூக்களை சுற்றும் வண்டுகளைப் போல்!
உன்னை கண்ட நாள் முதல்,
உன்னைச் சுற்றி அலைந்தேன் - பெண்ணே!

இன்றும், அலைகிறேன் உன்னைச் சுற்றியல்ல,
உனது பெயரை கொண்ட எனது மகளைச் சுற்றி!

15.8.08

சுதந்திர நாடிது!




கொடியவர்க்கு வோட்டு!
அடியவர்க்கு தீட்டு!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

'சாதி'யை நினைத்தோம்,
சாதிக்க மறந்தோம்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

பெரியோரைப் புழகாமல்,சிறியோரை இகழாமல்,
கணியன் சொன்ன வாழ கண்டோம்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

வள்ளுவன் சொல் படித்து வாழ்வோம் - ஆயினும்,
வள்ளுவன் சொல் படி வாழ மாட்டோம்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

அரசியலை நினைத்த அரசியல்வாதிகள் - உண்ணும்,
அரிசியை மறந்தனர்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

போர் வீரர்களை கொண்டாட மறுத்தோம் - ஆயினும்,
விளையாட்டு வீரர்களை அணைத்தோம்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

அலைகள் அடித்தால் கண் கலங்குவோம் - அடித்த
அலைகள் ஓயுமுன்னே அதையும் மறந்தோம்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

'கள்ளநோட்டிலும் நானா?
லஞ்சப் பணத்திலும் நானா?
திருட்டுப் பணதில்லும் நானா?'
ரூபாய் நோட்டில் காந்தியின் சிரிப்பு -
இன்று புரிந்தது!

சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

7.8.08

அழகு!



வானத்தில் நட்சத்திரங்கள்
மின்னுவது அழகாம்!
எனக்கோ - நீ(கூந்தல்)
பின்னுவது தான் அழகு!

உன் பார்வை!!!



மின்னல் வரும் போது,
வெள்ளிச்சம் பல கோடியாம்!
உன் பார்வைக்கு-
அது ஈடாகுமா?

6.8.08

முதுமை!!!



காலையில் எழுந்தேன்....
பள்ளிக்குச் சென்றேன்!
மாலையில் திரும்பினேன்!
இரவில் உறங்கினேன்!

இருபது வருடங்கள் கழிந்தன....

காலையில் எழுந்தேன்....
வேலைக்குச் சென்றேன்!
மாலையில் திரும்பினேன்!
இரவில் உறங்கினேன்!

நாற்பது வருடங்கள் கழிந்தன....

காலையில் எழுந்தேன்
மருந்துகள் உண்டேன்...
காலாற நடந்தேன்...
இரவில் உறங்கினேன்!

நாட்கள் தான் கழிய மறுக்கின்றன!

5.8.08

கனவு தேவதை!



இறைவன் படைத்த
டிஜிட்டல் சிற்பமே!
உன் அழகைப் பார்த்தால்..
சொர்க்கமும் சொற்பமே!

உன் அழகைப் பார்த்த
ரதிக்கு பொறாமை!-
மன்மதன் உன்னால் மயங்குவானோ?

வாகனங்கள் கடந்து செல்லும் போது,
விபத்துகள் ஆயிரம் - சாலையில்!
இவள் கடந்து செல்லும் போது,
விபத்துகள் ஆயிரம் - சாலையிலல்ல, என்னுள்!

3.8.08

சேல் விழியாள்!



ஒரு மீன் தொட்டிக்குள் -
இரண்டு மீன்கள்!
பார்த்துடன் ஞயாபகம் வந்தது...
கண்ணாடிக்குள் உந்தன் இரு கண்கள்!

அவள் எய்த அம்பு!



'வில்லைப் பார்க்க வேண்டுமா?
அவள் புருவம் பார்'-
என்றார் யாரோ!
பார்த்தேன்....
வில்லை மட்டும் அல்ல!
கண்களால் அவள் எய்த அம்பையும் தான்!
அனால், அம்புகளின் அடி வலிக்கவில்லை,
அவள் அம்பில்,
விஷத்திற்கு பதிலாக அமிர்தம் தடவி இருந்தாளோ?

காத்திருப்பு



உனது பூவுக்காக காத்திருந்தது,
நானல்ல!-
எனது கல்லறை!

ஏ பெண்ணே!



உன்னை நினைத்து எழுதும் போது
கிறுக்கல் கூட கவிதை ஆனது....
என்னை மறந்து உன்னை நினைக்கையில்...
சறுக்கல் கூட சுகம் தந்தது!

21.7.08

ஆண் வைரஸ்... பெண் நத்தை!!!




Chorus:


அவள் யார்? அவள் யார்?
அவள் யார்? அவள் யார்?
who is she????


Rap:

She is my love.... oh!oh!
She is my honey....ah!ah!
She is my life..... oh!oh!
She is my ah! ah! ah! ah!


சரணம் ஆண்:

அவள் யார் என்று சொல்ல, தமிழில் வார்த்தைப் பஞ்சம்!
அவள் யார் என்று சொல்ல, தமிழே என்னை கெஞ்சும்!
அவள் பேசுவதை கேட்டாலோ, தமிழே அவளைக் கொஞ்சும்!
அவள் அழகைப் பற்றி பார்த்தாலோ, அது நிலவையே மிஞ்சும்!-மிஞ்சும்!

ஓஹோ! ஓஹோ! ஒஹொஹோ!
ஆஹா! ஆஹா! அஹாஹா!


சரணம் பெண்:

அவன் யார் என்று சொல்ல மனதில் உண்டு அச்சம்!
அவன் யார் என்று சொல்ல, வார்த்தை இல்லை மிச்சம்!
அவன் நடந்து செல்வதைப் பார்க்க, விழிகள் என்னைக் கெஞ்சும்!
அவன் பேசுவதை கேட்டாலோ..... செவிகள் என்னை கொஞ்சும்! கொஞ்சும்!


பல்லவி ஆண்:

உடலை விட்டு நீங்கினால், வைரஸ் உயிரை இழக்கும்! உடலை மீண்டும் அடைந்தால், இழந்த உயிர் பிழைக்கும்!

நானும் வைரஸ் தான் கண்ணே!

உன்னை விட்டு நீங்கினால், உயிரை இழப்பேன்..... நான்!
உன்னை மீண்டும் அடைந்தால்! உயிர் பிழைப்பேன்.... நான்!


பல்லவி பெண்:

கூட்டை விட்டு நீங்கினால்... நத்தை உயிரை இழக்கும்!
கூட்டை மீண்டும் அடைய.... நத்தை உயிர் இருக்காது!

நானும் நத்தை தான் அன்பே....

உன்னை விட்டு நீங்கினால்... உயிரை இழப்பேன் நான்!
உன்னை மீண்டும் அடைய எந்தன் உயிர் இருக்காது!

Chorus:

உயிரை இழக்கும் பேச்சை விட்டு...
இனி, உயிரை வளர்ப்போம்!
......................................

இருவர் உள்ளம்!



ஆண்:

ஏன் இந்த மற்றம்?
என் மனம் என்னை கேட்டது!
நீ தந்த மாற்றம்!
என் மனமே பதிலும் சொன்னது!

ஆண்:

உன்னை சந்தித்த நொடி- நான்
என்னை மறந்தேன் - நீ
என்னை சிந்தித்த நொடி- தான்
விண்ணை அளந்தேன்!

காதலெனும்....காதலெனும்....
தீயை ஏற்றினாய் என்னுள்!
மோதலெனும்....மோதலெனும்....
தெய்வம் போற்றுவேன் - என்றும்!

பெண்:

என்ன சொல்கிறாய் அன்பே?
உனது காதலா?- இல்லை....
நமது காதலா?

நீயே என்னுள் உறைந்திடும் போது-
பேதம் எதற்கு?

ஆண்:

நீயும் நானும் ஒன்றான போது-
நாம் எதற்கு?

பெண்:

அன்னை பெற்ற நொடி-நான்
மண்ணை அடைந்தேன்-நீ
என்னைப் பெற்ற நொடி-தான்
பெண்மை அடைந்தேன்!

அன்பென்னும்.... அன்பென்னும்....
சேயை போற்றுவோம்... என்றும்!
காதலெனும்.... காதலெனும்....
தாயை போற்றுவோம்-என்றும்!

ஆண்:

உண்மை சொல்கிறாய் அன்பே!
நமது காதலா?-இல்லை
உலகக் காதலே!

அன்பை பரிமாறும் போது-
சொற்கள் எதற்கு?

பெண்:

காதல் பரிமாறும் பொது,
கேள்வி எதற்கு?

(உன்னை சந்தித்த நொடி.......)

மழை....



நீ இயற்கையின் அழுகை!
மேகத்தின் கதறல்!
உலகத்தின் சிதறல்!
தண்ணீரின் தற்கொலை!

இளைஞரிடம் தேவை விழிப்பு


சிறியதொரு கல்லாய்
பெரியதொரு சமுத்திரத்தில் இருக்கும்
இன்றைய இளைஞரே!
உங்கள் உணர்வில்,
உத்வேகமும் உண்டு!
விவேகமும் உண்டு!
வேதத்தில் வரும்,
தர்மமும் உண்டு!

நீ என்?
இதை செய்ய வேண்டுமென்று எண்ணாமல்,
எதையாவது செய்ய வேண்டுமென்று எண்ணுகிறாய்? -
யோசி!


நீ என்?
பெற்றோரிடம் அன்பு கொள்ளாமல்,
அறியாமையால்
உரிமை கொள்கிறாய்?
யோசி!
(அன்பினால் வரும் உரிமையல்ல!
உறவினால் வரும் உரிமை!)

வேண்டும் ஒரு வெற்றி
என்றெண்ணாமல்.
வேண்டாம் ஒரு தோல்வி,
என்றெண்ணாதே!

அப்போது,
உன் எண்ணம் தெளிந்தால்,
உன் வார்த்தைகள் முத்தாகும்!
எழுத்துக்கள் பவளமாகும்!

மாற்றி யோசி என்று
கூறும் என் கூற்றை
பற்றி யோசி!

பிறந்த நாள்



மரணத்தை நோக்கிச் செல்லும்
பயணம்!

20.7.08

வாழ்வில் தேவை....



வாழ்வில் பிழைக்க தேவை,
நா நயம்,
நாணயம்,
நாணயம்!!!

மதியும்-மதியும்(எனது முதற் சிலேடை)

தினமும் வளரும்
வளரும் - குறையும்
வளர்ந்தால் அழகு!
குறைந்தால் இழுக்கு!

முதற் செய்தி.....

வாசகர்களே, நான் பல நாட்களாக(சுமார் எட்டு வருடங்களாக) கவிதை எழுதி வருகிறேன். எனது கவிதைகளை பகிர்ந்து கொள்ள இது தான் சரியான சமயம் என்று எண்ணுகிறேன் ! இனி எனது கவிதைகள் பேசும்!