7.8.08

அழகு!



வானத்தில் நட்சத்திரங்கள்
மின்னுவது அழகாம்!
எனக்கோ - நீ(கூந்தல்)
பின்னுவது தான் அழகு!

உன் பார்வை!!!



மின்னல் வரும் போது,
வெள்ளிச்சம் பல கோடியாம்!
உன் பார்வைக்கு-
அது ஈடாகுமா?

6.8.08

முதுமை!!!



காலையில் எழுந்தேன்....
பள்ளிக்குச் சென்றேன்!
மாலையில் திரும்பினேன்!
இரவில் உறங்கினேன்!

இருபது வருடங்கள் கழிந்தன....

காலையில் எழுந்தேன்....
வேலைக்குச் சென்றேன்!
மாலையில் திரும்பினேன்!
இரவில் உறங்கினேன்!

நாற்பது வருடங்கள் கழிந்தன....

காலையில் எழுந்தேன்
மருந்துகள் உண்டேன்...
காலாற நடந்தேன்...
இரவில் உறங்கினேன்!

நாட்கள் தான் கழிய மறுக்கின்றன!

5.8.08

கனவு தேவதை!



இறைவன் படைத்த
டிஜிட்டல் சிற்பமே!
உன் அழகைப் பார்த்தால்..
சொர்க்கமும் சொற்பமே!

உன் அழகைப் பார்த்த
ரதிக்கு பொறாமை!-
மன்மதன் உன்னால் மயங்குவானோ?

வாகனங்கள் கடந்து செல்லும் போது,
விபத்துகள் ஆயிரம் - சாலையில்!
இவள் கடந்து செல்லும் போது,
விபத்துகள் ஆயிரம் - சாலையிலல்ல, என்னுள்!

3.8.08

சேல் விழியாள்!



ஒரு மீன் தொட்டிக்குள் -
இரண்டு மீன்கள்!
பார்த்துடன் ஞயாபகம் வந்தது...
கண்ணாடிக்குள் உந்தன் இரு கண்கள்!

அவள் எய்த அம்பு!



'வில்லைப் பார்க்க வேண்டுமா?
அவள் புருவம் பார்'-
என்றார் யாரோ!
பார்த்தேன்....
வில்லை மட்டும் அல்ல!
கண்களால் அவள் எய்த அம்பையும் தான்!
அனால், அம்புகளின் அடி வலிக்கவில்லை,
அவள் அம்பில்,
விஷத்திற்கு பதிலாக அமிர்தம் தடவி இருந்தாளோ?

காத்திருப்பு



உனது பூவுக்காக காத்திருந்தது,
நானல்ல!-
எனது கல்லறை!

ஏ பெண்ணே!



உன்னை நினைத்து எழுதும் போது
கிறுக்கல் கூட கவிதை ஆனது....
என்னை மறந்து உன்னை நினைக்கையில்...
சறுக்கல் கூட சுகம் தந்தது!