21.7.08

ஆண் வைரஸ்... பெண் நத்தை!!!




Chorus:


அவள் யார்? அவள் யார்?
அவள் யார்? அவள் யார்?
who is she????


Rap:

She is my love.... oh!oh!
She is my honey....ah!ah!
She is my life..... oh!oh!
She is my ah! ah! ah! ah!


சரணம் ஆண்:

அவள் யார் என்று சொல்ல, தமிழில் வார்த்தைப் பஞ்சம்!
அவள் யார் என்று சொல்ல, தமிழே என்னை கெஞ்சும்!
அவள் பேசுவதை கேட்டாலோ, தமிழே அவளைக் கொஞ்சும்!
அவள் அழகைப் பற்றி பார்த்தாலோ, அது நிலவையே மிஞ்சும்!-மிஞ்சும்!

ஓஹோ! ஓஹோ! ஒஹொஹோ!
ஆஹா! ஆஹா! அஹாஹா!


சரணம் பெண்:

அவன் யார் என்று சொல்ல மனதில் உண்டு அச்சம்!
அவன் யார் என்று சொல்ல, வார்த்தை இல்லை மிச்சம்!
அவன் நடந்து செல்வதைப் பார்க்க, விழிகள் என்னைக் கெஞ்சும்!
அவன் பேசுவதை கேட்டாலோ..... செவிகள் என்னை கொஞ்சும்! கொஞ்சும்!


பல்லவி ஆண்:

உடலை விட்டு நீங்கினால், வைரஸ் உயிரை இழக்கும்! உடலை மீண்டும் அடைந்தால், இழந்த உயிர் பிழைக்கும்!

நானும் வைரஸ் தான் கண்ணே!

உன்னை விட்டு நீங்கினால், உயிரை இழப்பேன்..... நான்!
உன்னை மீண்டும் அடைந்தால்! உயிர் பிழைப்பேன்.... நான்!


பல்லவி பெண்:

கூட்டை விட்டு நீங்கினால்... நத்தை உயிரை இழக்கும்!
கூட்டை மீண்டும் அடைய.... நத்தை உயிர் இருக்காது!

நானும் நத்தை தான் அன்பே....

உன்னை விட்டு நீங்கினால்... உயிரை இழப்பேன் நான்!
உன்னை மீண்டும் அடைய எந்தன் உயிர் இருக்காது!

Chorus:

உயிரை இழக்கும் பேச்சை விட்டு...
இனி, உயிரை வளர்ப்போம்!
......................................

இருவர் உள்ளம்!



ஆண்:

ஏன் இந்த மற்றம்?
என் மனம் என்னை கேட்டது!
நீ தந்த மாற்றம்!
என் மனமே பதிலும் சொன்னது!

ஆண்:

உன்னை சந்தித்த நொடி- நான்
என்னை மறந்தேன் - நீ
என்னை சிந்தித்த நொடி- தான்
விண்ணை அளந்தேன்!

காதலெனும்....காதலெனும்....
தீயை ஏற்றினாய் என்னுள்!
மோதலெனும்....மோதலெனும்....
தெய்வம் போற்றுவேன் - என்றும்!

பெண்:

என்ன சொல்கிறாய் அன்பே?
உனது காதலா?- இல்லை....
நமது காதலா?

நீயே என்னுள் உறைந்திடும் போது-
பேதம் எதற்கு?

ஆண்:

நீயும் நானும் ஒன்றான போது-
நாம் எதற்கு?

பெண்:

அன்னை பெற்ற நொடி-நான்
மண்ணை அடைந்தேன்-நீ
என்னைப் பெற்ற நொடி-தான்
பெண்மை அடைந்தேன்!

அன்பென்னும்.... அன்பென்னும்....
சேயை போற்றுவோம்... என்றும்!
காதலெனும்.... காதலெனும்....
தாயை போற்றுவோம்-என்றும்!

ஆண்:

உண்மை சொல்கிறாய் அன்பே!
நமது காதலா?-இல்லை
உலகக் காதலே!

அன்பை பரிமாறும் போது-
சொற்கள் எதற்கு?

பெண்:

காதல் பரிமாறும் பொது,
கேள்வி எதற்கு?

(உன்னை சந்தித்த நொடி.......)

மழை....



நீ இயற்கையின் அழுகை!
மேகத்தின் கதறல்!
உலகத்தின் சிதறல்!
தண்ணீரின் தற்கொலை!

இளைஞரிடம் தேவை விழிப்பு


சிறியதொரு கல்லாய்
பெரியதொரு சமுத்திரத்தில் இருக்கும்
இன்றைய இளைஞரே!
உங்கள் உணர்வில்,
உத்வேகமும் உண்டு!
விவேகமும் உண்டு!
வேதத்தில் வரும்,
தர்மமும் உண்டு!

நீ என்?
இதை செய்ய வேண்டுமென்று எண்ணாமல்,
எதையாவது செய்ய வேண்டுமென்று எண்ணுகிறாய்? -
யோசி!


நீ என்?
பெற்றோரிடம் அன்பு கொள்ளாமல்,
அறியாமையால்
உரிமை கொள்கிறாய்?
யோசி!
(அன்பினால் வரும் உரிமையல்ல!
உறவினால் வரும் உரிமை!)

வேண்டும் ஒரு வெற்றி
என்றெண்ணாமல்.
வேண்டாம் ஒரு தோல்வி,
என்றெண்ணாதே!

அப்போது,
உன் எண்ணம் தெளிந்தால்,
உன் வார்த்தைகள் முத்தாகும்!
எழுத்துக்கள் பவளமாகும்!

மாற்றி யோசி என்று
கூறும் என் கூற்றை
பற்றி யோசி!

பிறந்த நாள்



மரணத்தை நோக்கிச் செல்லும்
பயணம்!

20.7.08

வாழ்வில் தேவை....



வாழ்வில் பிழைக்க தேவை,
நா நயம்,
நாணயம்,
நாணயம்!!!

மதியும்-மதியும்(எனது முதற் சிலேடை)

தினமும் வளரும்
வளரும் - குறையும்
வளர்ந்தால் அழகு!
குறைந்தால் இழுக்கு!

முதற் செய்தி.....

வாசகர்களே, நான் பல நாட்களாக(சுமார் எட்டு வருடங்களாக) கவிதை எழுதி வருகிறேன். எனது கவிதைகளை பகிர்ந்து கொள்ள இது தான் சரியான சமயம் என்று எண்ணுகிறேன் ! இனி எனது கவிதைகள் பேசும்!